அதிகரித்தது ஐ.பி.எல். தொடரின் பார்வையாளர்களின் எண்ணிக்கை !

download 3
download 3

தற்சமயம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் இந்த வருடத்திற்க்கான ஐ.பி.எல். தொடரில் பார்வையாளர்கள் எண்ணிக்கை இந்த வருடம் 15 சதவீதமாக உயர்வடைந்துள்ளதாக தகவல்கள் வெளியோகியுள்ளது.

குறித்த தொடர் தொடர் நவம்பா் 10 ஆம் திகதியுடன் நிறைவுபெறுகிறது.

துபாய், அபுதாபி, ஷாா்ஜாவில் உள்ள கிரிக்கெட் மைதானங்களில் போட்டிகளில் நடைபெற்று வருகின்றன.

கடந்த மதம் 19 முதல் 25 வரையிலான ஆட்டங்களை 26.9 கோடி (269 மில்லியன்) பேர் பார்த்துள்ளார்கள்.

இதை 2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது பார்வையாளர்கள் எண்ணிக்கை 15 சதவீதம் அதிகமாகியுள்ளது.

இந்தக் கணக்கு தொலைக்காட்சி வழியாகப் பார்த்தவர்களை வைத்து மதிப்பிடப்பட்டது ஆகும்.

இணையம் வழியாக ஐ.பி.எல் ஆட்டத்தை நேரலையாகப் பார்த்தவர்களின் எண்ணிக்கை இதில் சேர்க்கப்படவில்லை.