இந்தியாவின் தமிழகத்தில் கடந்த 48 மணிநேரத்தில் ஐயாயிரத்து 595 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் தொற்று கண்டறியப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை ஆறு இலட்சத்து எட்டாயிரத்து 885 ஆகப் பதிவாகியுள்ளது.
மேலும், கொரோனா வைரஸ் தொற்றினால் நேற்று (02) 67 பேர் உயிரிழந்துள்ளதுடன் மொத்த மரணங்கள் ஒன்பதாயிரத்து 603ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சென்னையில் மட்டும் ஒரேநாளில் ஆயிரத்து 278 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
அத்துடன், தமிழகம் முழுவதும் ஐயாயிரத்து 603 பேர் குணமடைந்து இன்று வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில், தொற்றிலிருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஐந்து இலட்சத்து 52 ஆயிரத்து 938ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் மேலும் 46 ஆயிரத்து 294 பேர் தொடர்ந்து வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருவதாக சுகாதாரத் துறை குறிப்பிட்டுள்ளது.