மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவருக்கு ஏற்பட்டுள்ள புதிய சிக்கல் !

images 2
images 2

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் கூட்டங்களில் கலந்து கொள்வதில் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின்இணைத் தலைவரும்,தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின்தலைவருமான பிள்ளையானுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அதன்படி இவர் அபிவிருத்திக் குழு கூட்டத்தில் கலந்து கொள்ள நீதிமன்றத்தின் அனுமதி தேவைப்படுகின்றது.

நீதிமன்ற உத்தரவு இல்லாமல் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாது என சிறைச்சாலை ஆணையர் சந்தன ஏகநாயக்க, தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் சிவனேசதுரை சந்திரகாந்தன் ஆகஸ்ட் 10 ஆம் திகதி நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் வைத்து பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ முன்னிலையில் பதவியை பொறுப்பேற்றமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளைபிள்ளையான் என்று அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன்தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை வழக்கு தொடர்பாக கைதுசெய்யப்பட்டு நீதிமன்ற தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது .