சிறுவன் கொடுத்த கடிதத்திற்கு பிரதமரின் உடனடி நடவடிக்கை!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று முன்தினம் நாரஹென்பிட்டி விகாரைக்கு சென்ற சந்தர்ப்பத்தில் சிறுவன் ஒருவர் அவருக்கு கடிதம் ஒன்றை வழங்கியுள்ளார்.

அந்த கடிதத்தில் தங்களுக்கு வீடு ஒன்று இல்லை பெற்றுத் தருமாறு சிறுவன் குறிப்பிட்டுள்ளார்.

கடிதத்திற்கு உடனடியாக பதில் வழங்கிய பிரதமர், வீடு ஒன்றை பெற்று தருவதாக வாக்குறுதியளித்துள்ளார்.

கடிதத்தை வாசித்த பிரதமர் அந்த சிறுவனுடன் வந்த தாயை அழைத்து வீடு ஒன்றை வழங்குவதற்கு வாக்குறுதியளித்து, வீட்டு அதிகார சபையின் தலைவரை சந்திக்குமாறு கூறியுள்ளார்.