திருகோணமலை கோணேஸ்வரர் ஆலயத்திலிருந்து விழுந்து நபரொருவர் உயிரிழப்பு

body2
body2

திருகோணமலை கோணேஸ்வரர் ஆலயத்திலிருந்து விழுந்து நபரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று காலை(30) இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

குறித்த நபர் மோட்டார்சைக்கிளில் வருகை தந்த நிலையில் கோணேஸ்வரர் ஆலயத்தில் இருந்து கற்பாறையில் விழுந்து சிக்குண்ட நிலையில் உயிரிழந்துள்ளார் என தெரியவருகிறது.

இந்த நிலையில் அவரது சடலம் தற்பொழுது கற்பாறை அருகில் வைக்கப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உவர்மலை பகுதியைச் சேர்ந்த ஏ.செந்தூரன் (38 வயது) என்பவரே உயிரிழந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

குறித்த நபரின் சடலத்தை திருகோணமலை நீதிமன்ற நீதவான் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்ட பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தலைமை பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.