27 வயதுடைய இளைஞன் ஒருவரை கத்தியால் குத்திய பின்னர் ஐந்தாம் மாடியில் இருந்து தள்ளிவிழுத்தி கொலை செய்த நான்கு சந்கே நபர்களை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் கடந்த 28 ஆம் திகதி கொழும்பு கொள்ளுப்பிட்டி பகுதியில் இடம்பெற்றுள்ளது.
அத்துடன் கொல்லப்பட்ட இளைஞனின் கைபேசி, மாடி கட்டடத்தின் திறப்பு மற்றும் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கத்தி ஆகியன கைதான சந்தேக நபர்களிடமிருந்து மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.