கடான பகுதியில் இடம்பெற்ற கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை இன்று 03 நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி இரண்டு நாள் தடுப்பு காவல் உத்தரவினை பொலிஸார் பெற்றுள்ளனர்.
அவர்களிடன் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைவாக கம்பஹா மொரகொட பகுதியில் 11 இலட்சம் ரூபாவும், குருணாகலையில் 21 இலட்சம் ரூபாவும் மற்றும் நிகவரெடிய பிரதேசத்தில் இடமொன்றில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 28 இலட்சம் ரூபாவும் மற்றும் 18 கிராம் தங்கமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் மேலும் இரண்டு சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, கொள்ளையர்கள் தப்பிச் செல்லும் புதிய சிசிடிவி காணொளியொன்று பொலிஸாரால் ஊடகங்களுக்கு வௌியிடப்பட்டுள்ளது.