தபால் மூல வாக்களிப்பின் போது புகைப்படம் எடுத்த மூவர் கைது

Arrest
Arrest

தபால் மூல வாக்களிப்பின் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி பகிர்ந்துள்ள 03 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் தற்போது விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர் ருவண் குணசேகர தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்கள் இருவரும், பாடசாலையின் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

தபால் மூல வாக்களிப்பின் போது வாக்குச் சீட்டில் புள்ளடியிடுவதை புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிடும் அரச அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய ஏற்கனவே அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.