காலி மைதானத்தில் இலங்கை – நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது
நியூசிலாந்து அணித்தலைவர் கேன் வில்லியம்சனின் பந்து வீச்சு குறித்து புகார் அளிக்கப்பட்டது. இதனால் அவரது பந்து வீச்சு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
ஐசிசி அனுமதித்துள்ள 15 டிகிரிக்கு மேல் அவரது கை வளையவில்லை என்பது தெரியவந்துள்ளது. இதனால் கேன் வில்லியம்சனை தொடர்ந்து பந்து வீச ஐசிசி அனுமதித்துள்ளது.
ஏற்கனவே 2014ல் இதுபோன்று புகார் எழுப்பப்பட்டது. அப்போது அவரது பந்து வீச்சில் சில மாற்றங்களை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.