அனைத்து தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகளின் ஆசனங்களின் எண்ணிக்கைக்கு மட்டுமே பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடைமுறையை உடனடியாக அமல்படுத்தப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
திவுலபிடிய பிரதேசத்தை சேர்ந்த 39 வயதுடைய பெண் ஒருவருக்கே கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்தே இந்த நடைமுறை பின்பற்றப்படவுள்ளது.