தமிழ் மக்கள் இனங்களாக பிரிந்து செயற்படுவதை விடுத்து, இணைந்து செயலாற்ற வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு ஆசனம் எதுவும் கிடைக்கவில்லை.
இந்தவிடயம் தொடர்பில், வானொலி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியனிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த அவர், கிழக்கு மாகாணத்தில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது இன ரீதியான கருத்துகள் முன்வைக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.