ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகிறார் மைத்திரி!

111 2
111 2

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (5) உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன் இன்று முதன் முதலில் சாட்சியமளிக்கவுள்ளார்.

இன்று சாட்சியமளிக்க முன்னிலையாகுமாறு முன்னாள் ஜனாதிபதிக்கு கடந்த செப்டம்பர் 22 ம் திகதி, ஆணைக்குழுவினால் அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது.

மைத்திரியின் சாட்சியத்தைத் தொடர்ந்து, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாளை (6) ஆணைக்குழுவில் முன்னிலையாவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.