வெளிநாடுகளில் இருந்து மேலும் பல இலங்கையர்கள் நாடு திரும்பினர்!

777
777

வேலை நிமித்தம், வெளிநாடு சென்றிருந்த மேலும் பலர் நாடு திரும்பியுள்ளனர். துபாயில் இருந்து நேற்று மாலை 400 பேர் நாடு திரும்பியுள்ளனர். இவர்களுள் 7 சிறுவர்களும் உள்ளடங்குகின்றனர். மத்தள விமான நிலையத்திற்கு வருகை தந்த இவர்கள் பி.சி.ஆர் பரிசோதனையின் பின்னர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, ஜப்பான் மற்றும் கட்டாரில், தொழிலுக்காக சென்று இலங்கை வர முடியாமல் அந்த நாடுகளில் சிக்கியிருந்த 425 இலங்கையர்கள் இன்று காலை கட்டுநாயக்க மற்றும் மத்தள விமான நிலையங்களை வந்தடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

ஜப்பானில் தொழில் வாய்ப்புக்காக சென்றிருந்த 280 இலங்கையர்கள் டோக்கியோ நகரில் இருந்தும் தமிழ் நாடு சென்னையில் இருந்தும் 27 பேர் மத்தள விமான நிலையத்தை வந்தடைந்தனர். இவர்கள் அனைவரும் விமான நிலையங்களில் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.