நீராட சென்ற இளைஞன் நீரில் மூழ்கி பலி!

1212 1
1212 1

சிலாபம் – மாராவில் கடல் பகுதியில் நீராட சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.இந்த சம்பவம் இன்றைய தினம் இடம்பெற்றதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்

குறித்த கடற்ப்பரப்பில் கடந்த 2012 ஆம் ஆண்டு கைவிடப்பட்ட படகு ஒன்று காணப்படுகின்றமையினால் அதனருகே சென்று நீராடிய 10 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாத்தாண்டி, கொட்டாரமுல்ல பகுதியை சேர்ந்த 37 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சடலம் வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ள நிலையில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.