நாட்டின் பல பகுதிகளில் 2,044 கிலோ கிராம் மஞ்சள் மீட்பு..!

கடற்படை மற்றும் காவல்துறை அதிரடிப்படையினரால் நாட்டின் பல பகுதிகளில் இருந்து 2,044 கிலோ கிராம் மஞ்சள் கைப்பற்றப்பட்டுள்ளது.

அதில் 1,297 கிலோ கிராம் மஞ்சளுடன் உடப்பு பகுதியில் 3 சந்தேகநபர்கள் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் முந்தல் – சின்னப்பாடு கடற்கரைக்கு அருகில் இருந்து 403 கிலோ கிராம் மஞ்சள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

அதேநேரம் பேசாலை பகுதியில் இருந்து 344 கிலோ கிராம் மஞ்சள் காவல்துறை அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

இதன்போது குறித்த மஞ்சளை கொண்டு செல்வதற்காக பயன்படுத்தப்பட்டுள்ள பாரவூர்தியொன்றும் காவல்துறை அதிரடிப்படையினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளது.