வவுனியாவில் மரம் முறிந்து வீழ்ந்ததில் மோட்டார் சைக்கிளில் சென்றவர் படுகாயம்!

IMG 4eab92db4d189a97388118320c7e96a5 V
IMG 4eab92db4d189a97388118320c7e96a5 V

வவுனியா கண்டி வீதியிலுள்ள பேயாடிகூழாங்குளம் இராணுவ முகாமிற்கு முன்பாக உள்ள மரம் ஒன்று இன்று (07) பிற்பகல் முறிந்து வீழ்ந்ததில் அவ்வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் படுகாயமடைந்து நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில் , 
இன்று பிற்பகல் வவுனியா கண்டி வீதி பேயாடிகூழாங்குளம் பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாமிற்கு முன்னாலுள்ள மரம் திடீரென்று முறிந்து வீழ்ந்துள்ளது . இதன்போது அவ்வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் சம்பவ இடத்திற்கு முன்பாக உள்ள இராணுவ முகாமின் படையினர் முறிந்த மரத்தை போக்குவரத்திற்கு இடையூறு இன்றி அப்புறப்படுத்தும்  நடவடிக்கையில் ஈடுபட்டதுடன் இவ்விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

IMG f75cadd8cfff2b7c4130324ad71cda93 V
IMG 635f97e3e95103658935d988f15d237a V
IMG e05f21b53bc24880385b4df6d75912fe V