மத்திய மாகாணத்தில் மீள் அறிவித்தல் வரை மேலதிக வகுப்புக்களுக்கு தடை

thervi
thervi

மத்திய மாகாணத்தில் மீள் அறிவித்தல் வரை அனைத்து மேலதிக வகுப்புக்களுக்கும் தடை விதிக்குமாறு மத்திய மாகாண ஆளுநர் லலித் யு கமகே பணிப்புரை விடுத்துள்ளார்.

அத்துடன் கிழக்கு மாகாணத்திலும் மீள் அறிவிப்பு வரை அனைத்து மேலதிக வகுப்புக்களையும் தற்காலிகமாக இடைநிறுத்துமாறு கிழக்கு மாகாண ஆளுநர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

மேலும் தென் மாகாணத்திலும் மீள் அறிவிப்பு வரை அனைத்து மேலதிக வகுப்புக்களையும் தற்காலிகமாக இடைநிறுத்துமாறு தென் மாகாண ஆளுநர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்காகவே இந்த செயல்முறை நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது