கம்பஹா மாவட்டத்தின் 18 காவற்துறை பிரிவுகளுக்கு பிறப்பிக்கப்பட்டது ஊரடங்குச்சட்டம் !

C4 7
C4 7

நாட்டில் உடனடியாக அமுலாகும் வகையில் கம்பஹா மாவட்டத்தின் 18 காவற்துறை அதிகாரத்துக்குட்பட்ட பிரதேசங்களில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

காவற்துறை தலைமையகம் விடுத்துள்ள அறிவிப்பில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி கம்பஹா, கனேமுல்ல, கிரிந்திவெல, தொம்பே, மல்வத்துஹிரிபிட்டிய, மீரிகம, நிட்டம்புவ, பூகொட, வீரகுல, வெலிவேரிய, பல்லேவெல, யக்கல ஆகிய காவற்துறை அதிகாரங்களுக்குட்பட்ட பிரதேசங்களில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

அதேபோல், திவுலப்பிட்டிய,மினுவாங்கொடை மற்றும் வெயாங்கொடை ஆகிய காவற்துறை பிரிவுகளுக்குற்பட்ட பகுதிகளுக்கும் காவற்துறை ஊரடங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

அதேபோல், உடனடியாக அமுலாகும் வகையில் கம்பஹா காவற்துறை தொகுதிக்கும்,

கந்தானை மற்றும் ஜா-எல காவற்துறை பிரிவுகளுக்கும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேனை ஊரடங்கு உத்தரவினை மீறிய 79 பேர் இதவரை கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.