இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள சீனத் தூதுக் குழு..!

சீனாவின் முன்னாள் வெளிநாட்டு அமைச்சரும், தற்போதைய கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் பணியக உறுப்பினருமான யங் ஜீச்சி அவர்களின் தலைமையிலான உயர் அதிகாரமுள்ள சீனத் தூதுக் குழுவினர் இன்று (08) இலங்கையை வந்தடையவுள்ளனர்.

உலகளாவிய கொரோனா தொற்று நோய்க்குப் பின்னர், தெற்காசியப் பிராந்தியத்தில் இடம்பெறும் சீனாவின் முதலாவது விஜயமாக இது அமைவதனால், உலகளாவிய தொற்று நோயை எதிர்த்துப் போராடுதல் மற்றும் பொருளாதார உறவுகளின் மறுமலர்ச்சி ஆகியவற்றில் இந்த விஜயம் இலங்கைக்கும் சீனாவிற்குமிடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

விஜயம் செய்யும் சீனத் தூதுக் குழுவினர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரை ஒக்டோபர் 9 ஆந் திகதி சந்திப்பர் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சுகாதாரத் துறையினால் விதிக்கப்பட்டுள்ள கடுமையான கொவிட்-19 ஒழுங்குவிதிகளுக்கு அமைய, ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருடன் இடம்பெறவுள்ள சந்திப்புகளுக்கு மாத்திரமே, சீன தூதுக்குழுவின் நடவடிக்கைகள் வரையறுக்கப்பட்டுள்ளதாக தெரிக்கப்பட்டுள்ளது.