கர்ப்பிணி பெண் ஒருவருக்கு கொரோனா!

கொழும்பு காசல் வீதி மகளிர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கம்பஹா, மீரிகம பகுதியை சேர்ந்த 28 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் பிரதீப் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றுறுதியானதை அடுத்து முல்லேரியா பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.