பல்கலைக்கழகங்களில் கல்வி நடவடிக்கைகளை வழமை போன்று முன்னெடுக்குமாறு அனைத்து உபவேந்தர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
சுகாதார நடைமுறைகளை பின்பற்றி கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
களனி பல்கலைகழகம் கடந்த 04 ஆம் திகதி முதல் ஒரு வாரத்திற்கு மூடப்பட்டுள்ளது.
கொரோனா அபாயம் காரணமாக களனி பல்கலைக்கழகம் மற்றும் கம்பஹா விக்ரமாரச்சி ஆயுர்வேத பல்கலைக்கழகம் என்பன மூடப்பட்டுள்ளன.