வவுனியா விருந்தினர் விடுதியில் கழிவு நீர் வெளியேறுவதால் மக்கள் அசௌகரியம்

வவுனியா சிங்கள பிரதேச சபையின் உப தவிசாளருக்கு சொந்தமான கண்டி வீதி தேக்கவத்தை 5 ஆம் ஒழுங்கையிலுள்ள விருந்தினர் விடுதியில் கலாச்சார சீரழிவுகள் நீண்டகாலமாக இடம்பெற்று வருகின்றது .

இதனை தடுத்து நிறுத்துமாறு பல தரப்பினரிடம் கோரியும் அச் செயற்பாடு தடுத்து நிறுத்தப்படவில்லை . இதனால் இப்பகுதியில் வசிக்கும் குடும்பங்கள் பெரும் அசௌகரியங்களுக்குள்ளாகி வருகின்றனர் .

விருந்தினர் விடுதியில் இருந்து வெளியேறும் கழிவு நீர் அப்பகுதியிலுள்ள வாய்க்காலில் செல்வதாகவும் அங்கு தேங்கி நிற்பதாலும் டெங்கு நுளம்பு பெருகும் அபாயம் காணப்படுகின்றது . இது குறித்து அப்பகுதிக்கு பொறுப்பாக உள்ள சுகாதாரப்பரிசோதகரிடம் அறிவிக்கப்பட்டு எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை .

சிங்கள பிரதேச சபையின் உப தவிசாளருக்கு சொந்தமான விருந்தினர் விடுதி என்பதால் நடவடிக்கைகள் எடுப்பதற்கு பலர் அச்சம் தெரிவித்து வருகின்றனர் . அல்லது ஆதரவளிக்கின்றனர் .

எனவே தகுதி தராதரம் பாராது விருந்தினர் விடுதியில் இடம்பெறும் கலாச்சார சீரழிவு , கழிவு நீர் வெளியேற்றம் என்பனவற்றைத்தடுத்து சுகாதாரமாக வாழ்வதற்கு வழியேற்படுத்தித்தருமாறும் அப்பகுதியில் வசித்து வரும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .