மன்னாரில் 396 கிலோ மஞ்சள் மீட்பு

images 5
images 5

மன்னார் தாழ்வுபாடு கடற் பிராந்தியத்தில் இன்று அதிகாலை(08) 396 கிலோ மஞ்சள் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். 

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில் ,

இன்று அதிகாலை மன்னார் தாழ்வுபாடு கடற்பிராந்தியத்தில் கடற்படையினர் கூட்டு ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வேளையில் இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் பொதி ஒன்றிலிருந்து 396 கிலோ மஞ்சள் மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் சுங்கத்திணைக்களத்திடம் கடற்படையினால் ஒப்படைக்கப்பட்டுள்ளது . 
எனினும் இச்சம்பவத்துடன் தொடர்புபட்ட எவரும் இது வரையில் கைது செய்யப்படவில்லை என்றும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது .