அத்துமீறிய சிங்களக் குடியேற்றம் : சமலின் கவனத்துக்கு கொண்டு சென்றார் சாணக்கியன்

R.Sanakkiyan 4
R.Sanakkiyan 4

மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லை பிரதேசமான மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை பகுதிகளில் அம்பாறை மாவட்ட பெளத்த பிக்கு தலைமையிலான குழுவினரால் அபகரிக்கப்படும் காணிகள்தெடர்பாகவும் இதனால் அப் பகுதியில் ஏற்படவுள்ள இனமுரண்பாடுகள்பற்றியும் ;மகாவலிஅபிவிருத்தி மற்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைசசர் சமல் ராஜபக்ஷவின் கவனத்திற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கொண்டு வந்தார்.


நேற்று (புதன்கிழமை)அமைச்சர் சமல்ராஜபக்ஷவை, இரா.சாணக்கியன் மகாவலி வலய அபிவிருத்தி திட்டங்கள் நடைபெற்று வரும் மட்டக்களப்பு மாவட்ட எல்லைபகுதிகளுக்கு அழைத்து வந்து நிலை மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லை பிரதேசமான மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை பகுதிகளில் அம்பாறை மாவட்ட பெளத்த பிக்கு தலைமையிலான குழுவினரால் அபகரிக்கப்படும் காணிகள் தெடர்பாகவும் இதனால் அப்பகுதியில் ஏற்படவுள்ள இனமுரண்பாடுகள் பற்றியும்; மகாவலி அபிவிருத்தி மற்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷவின் கவனத்திற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கொண்டு வந்தார்.


நேற்று (புதன்கிழமை) அமைச்சர் சமல்ராஜபக்ஷவை, இரா.சாணக்கியன் மகாவலிபி வலய அபிவிருத்தி திட்டங்கள் நடை
பெற்று வரும் மட்டக்களப்பு மாவட்ட எல்லை பகுதிகளுக்கு அழைத்து வந்து நிலைமையை விளக்கினார்

அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த பெளத்த பிக்கு தலைமையிலான குழுவினர் அத்து மீறி காணிகளை அபகரித்து விவசாய செய்கையில் ஈடுபடுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்பதையும் தெரிவித்தார்.அத்துடன், அதனால் மட்டக்களப்பு மாவட்ட கால்நடை வளர்ப்பாளர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பாகவும்,இதனால் ஏற்படக்கூடிய தமிழ் சிங்கள இன முரண்பாடுகள் பற்றியும் அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு வந்தமையுடன் இதன் பின்னணியில் கிழக்கு மாகாண ஆளுநர் இருக்கின்றமையையும் சுட்டிக்காட்டியிருந்தார்.


இதனைக் கேட்டறிந்த அமைச்சர், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து கூட்டம் ஒன்றை நடத்தி நடவடிக்கை எடுப்பார்
எனவும் அது தொடர்பான முடிவுகளை விரைவில் அறிவிப்பார் எனவும் இரா.சாணக்கிய னிடம் உறுதிமொழி வழங்கியுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் திட்டமிட்டுசெயற்படுத்தப்படும் இந்த அபகரிப்பு நடவடிக்கைகளைநிறுத்துவதற்குத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தொடர்ந்தும்முயற்சி செய்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.