அமர்வில் பங்குபற்றவோ வாக்களிக்கவோ மரண தண்டனைக் கைதி தகுதி அற்றவர்!சட்டமா அதிபர் விளக்கம்

unnamed 2 2
unnamed 2 2

மரண தண்டனை விதிக்கப்பட்ட கஹவத்த பிரதேச சபை உறுப்பினர் வஜிர தர்ஷன டி சில்வா அமர்வுகளில் கலந்துகொள்ளவோ அல்லது வாக்களிக்கவோ தகுதியற்றவர் என சட்டமா அதிபர் அறிவித்துள்ளார்.நீதி அமைச்சின் செயலாளருக்கு சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா இந்த அறிவிப்பை விடுத்துள்ளார் என சட்டமா அதிபர் திணைக்
களத்தின் ஒருங்கிணைப்பு அதிகாரி நிஷாரஜெயரத்ன தெரிவித்துள்ளார்.

நேற்று செவ்வாய்க்கிழமை, மரணதண்டனை விதிக்கப்பட்ட வஜிர தர்ஷன டி சில்வா ஒக்ரோபர் 08 ஆம் திகதி கஹவத்த
பிரதேச சபை அமர்வில் கலந்து கொள்ள அனுமதிக்குமாறு சிறைச்சாலை ஆணையாளருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. கஹவத்த பிரதேச சபை உறுப்பினர் வஜிர தர்ஷன டி சில்வாவிற்கு ஜூலை 31ஆம்திகதி மரண தண்டனையும் 47 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுஅதே நாளில் சிறையில் அடைக்கப்பட்டார்.


மரண தண்டனை கைதி மரண தண்டனைக்கு எதிராக மேன்முறையீடு செய்துள்ளமையுடன் தற்போது மேன்முறையீடு
செய்த கைதியாக வெலிகடைசிறையில்அடைக்கப்பட்டுள்ளார். சிறைச்சாலை சட்டங்கள் மற்றும் ஒழுங்கு முறைகளில் அத்தகைய கோரிக்கைக்கான ஏற்பாடுகள் இல்லை என்பதால் சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் இந்த விவகாரம் தொடர்பாக ஆலோசனை வழங்குமாறு அமைச்சின் செயலாளரிடம் கோரியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது