மினுவாங்கொட பகுதியில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் பலருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
இந்த நிலையில் பின்னவல பகுதியில் அமைந்துள்ள பிரண்டிக்ஸ் ஆடைத்தொழிற்சாலை இன்று முதல் தனிமைப்படுத்தல் நிலையமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றுக்குள்ளான ஊழியர்களை தனிமைப்படுத்தி தொற்றுநீக்கல் செய்யும் வகையில் பிரண்டிக்ஸ் நிறுவனம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.