கிளிநொச்சி பகுதியில் தாக்குதல் முயற்சி ஒன்றில் ஈடுபடத் தயாரக இருந்த குழு ஒன்றைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர்கள் நேற்று கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் அவர்களை 14 நாள் தடுப்பு காவலில் வைக்க நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
புலனாய்வு பிரிவிற்கு கிடைத்த இரகசிய தகவலிற்கு அமைவாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது குறித்த நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சுற்றிவளைப்பு நடவடிக்கையில் கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து நான்கு வாள்களும் மீட்கப்பட்டுள்ளன.
வட்டக்கச்சி மற்றும் மல்லாவி, வள்ளிபுனம் ஆகிய பகுதிகளில் சிலரை தாக்குவதற்கு திட்டமிட்டிருந்த வட்டக்கச்சி, பரந்தன், செல்வாநகர் பகுதிகளை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்
.
இவ்விடயம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கிளிநொச்சிப் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.