வவுனியா பாடசாலைகளில் தொற்று நீக்கும் செயற்பாடு முன்னெடுப்பு

1 32
1 32

கொவிட் – 19 அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் சுகாதார நடைமுறைகளுடன் தரம் 5 மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பரீட்சை ஞாயிற்றுக் கிழமை நாடாளாவிய ரீதியில் நடைபெறவுள்ளது.

இதனை முன்னிட்டு சுகாதார பரிசோதகர்களின் மேற்பார்வையின் கீழ் வவுனியா நகரசபையினால் நகரசபை எல்லைக்குட்பட்ட பாடசாலைகளில் தொற்று நீக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டது.

கிருமி நீக்கும் மருந்துகள் விசிறப்பட்டதுடன், கைகழுவுதல் உள்ளிட்ட உள்ளிட்ட சுகாதார நடைமுறைகள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.