உழவு இயந்திரம் விபத்துக்குள்ளானதில் இரு இளைஞர் உயிரிழப்பு; இருவர் படுகாயம்!

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை மணல்பிட்டி பகுதியில் உழவு இயந்திரம் வேகக்கட்டுப்பாட்டை மீறி வீதியில் தடம்புரண்டதில் உழவு இயந்திரத்தில் பயணித்த இருவர் உரிழந்துள்ளதுடன் இருவர் படுகாயமடைந்த நிலையல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச் சம்பவம் இன்று (09) பகல் இடம்பெற்றுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிசார் தெரிவித்தனர்.

கொக்கட்டிச்சோலை 10ம் பிரிவைச் சேர்ந்த 17 வயதுடைய தவக்குமார் டிலக்ஷன் , 19 வயதுடைய ஞானசேகரன் கிளிஷன் என்ற இரு இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

கொக்கட்டிச்சேலை தாந்தமலை பிரதான வீதியில் தாந்தாமலை பகுதியை நோக்கி உழவு இயந்திரத்தில் நான்குபேர் பயணித்த போது மணல்பிட்டி சந்திபகுதியில் வீதியில் வந்த முச்சக்கரவண்டி ஒன்றிற்கு வழிவிட முற்பட்டதனால்; வேகமாக சென்ற உழவு இயந்திரம் வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டுவிலகி விபத்துக்குள்ளானதில் இருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதுடன்; படுகாயமடைந்த இருவரையும் மகிழடித் தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் உயிரிழந்தவர்களின் சடலம் மட்டு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை போக்குவரத்து பிரிவு பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.