கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலை ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க பிரதேச சுகாதார பரிசோதகர் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
குறித்த பிரதேசத்தில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் 38 வயதான பெண்ணிற்கே கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.