கொரோனா தொற்றை தடுப்பதற்கு தேசிய ஓளடதங்கள் தயாரிப்பு- சிசிர ஜெயக்கொடி!

14444
14444

தேசிய வைத்திய அமைச்சின் மூலம் பாதிக்கப்பட்ட நபர்களையும், வைரஸ் பாதிப்புக்குள்ளாகும் நபர்களையும் இலக்காக கொண்டு தேசிய ஓளடதங்கள் பல இதுவரையில்  தயாரிக்கப்பட்டுள்ளதாக சுதேச மருத்துவ ஊக்குவிப்பு, கிராமப்புற மற்றும் ஆயுர்வேத மருத்துவமனைகள் மேம்பாடு மற்றும் சமூக ஆரோக்கியம் இராஜாங்க அமைச்சர் சிசிர ஜெயக்கொடி அவர்கள் தெரிவித்துள்ளார்.

ஆயுர்வேத திணைக்களம் மற்றும் ஆயுள்வேத மருந்துக்கூட்டுத்தாபனத்துடன் இணைந்து நோய்த்தடுப்பு பானம் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருந்துக் குளிகள்ஆகியவற்றை அறிமுகப்படுத்தியுள்ளதாகவும் இந்த மருந்துகள் அனைத்தும் நூறு சதவீதம்  உள்ளூர் மூலிகைகளைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகின்றன என்றும் அவை ‘சதங்கா’ பானம் மற்றும் ‘சுவதரணி’ நோயெதிர்ப்புபானம் என பெயரிடப்பட்டுள்ளன என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மருந்துகள் ஒக்டோபர் 12 ஆம் திகதி முதல் அறிமுகப்படுத்த தீர்மானித்துள்ளதாகவும்  இன்று பாராளுமன்றத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு குறித்த மருந்து அறிமுகப்படுத்தப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் ஜெயகொடி  அவர்கள் தெரிவித்தார்.

மேலும் மேற்கத்திய மருத்துவத்தினால் இதுவரையிலும் கொரோனா தொற்றை குணப்படுத்த முடியவில்லை,எனவே மேற்கத்திய மருத்துவம் இன்று கடுமையான பின்னடைவை சந்தித்துள்ளது என்றும் இதன் போது அமைச்சர் சுட்டிக்காட்டினார்.எவ்வாறாயினும், இந்த சவாலை எதிர்கொள்ளக்கூடிய மருந்துகளை உள்நாட்டு மருத்துவ அமைச்சினால் தயாரிக்க முடிந்ததுள்ளது என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.