பயன்படுத்தப்படாத வீட்டில் உள்ள மின் இலத்திரனியல் கழிவு பொருட்களை அருகில் உள்ள அஞ்சல் அலுவலகத்தில் கையளிக்குமாறு சுற்றாடல்துறை அமைச்சு கோரியுள்ளது.
கடந்த 2ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட குறித்த கழிவு சேகரிப்பு பணி நாளையுடன் நிறைவுத்தப்படவுள்ளன. இந்தநிலையில் பயன்படுத்தப்படாத இலத்திரனியல் கழிவு பொருட்களை விரைவில் அஞ்சல் அலுவலகங்களில் கையளிக்குமாறு விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் மகிந்த அமரவீர பொதுமக்களை கோரியுள்ளார்.
இலத்திரனியல் கழிவுப்பொருட்கள் காரணமாக பாரிய அளவிலான சூழல் மாசு ஏற்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.