கொழும்பின் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு!

720x380 1 720x380 1
720x380 1 720x380 1

கொழும்பின் சில பகுதிகளில் நாளை 12 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அதன்படி கொழும்பு 01, 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிளுக்கான நீர் விநியோகமானது நாளை இரவு 10.00 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை 10.00 மணி வரை அமுல்படுத்தப்படும்.

அவசர பழுதுபார்ப்புக் காரணமாகவே இவ்வாறு நீர் விநியோகம் தடைசெய்யப்படவுள்ளதாகவும் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.