வளிமண்டளவியல் திணைக்களம் விடுத்துள்ள கோரிக்கை!

இலங்கையின் சில பகுதிகளில் கனத்த மழை பெய்யக் கூடுமென வளிமண்டளவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மழைக்கான சாத்தியம் உள்ளதாக எதிர்வு கூறப்பட்டுள்ளது.

கிழக்கு – மத்திய வங்காள விரிகுடா கடற் பிராந்தியங்களில் குறைந்த அழுத்த தாழமுக்கம் வலுவடையக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை ஆழமான கடற் பிராந்தியங்களுக்கு செல்வதை தவிர்த்து அவதானமாக இருக்குமாறு மீனவ மற்றும் கடல்சார் சமூகத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது