தமிழகத்தில் மீண்டும் அதிகரித்தது கொரோனா தொற்று!

16edb31cf4181a07e808eb9e2a1dcd97 1
16edb31cf4181a07e808eb9e2a1dcd97 1

தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக கடந்த 24 மணிநேரத்தில் 68 மரணங்கள் பதிவாகியுள்ளன.

இதன்படி, தமிழகத்தில் கொரோனா தொற்றினால் மரணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 10 ஆயிரத்து 120 ஆக அதிகரித்துள்ளது.

குறித்த காலப்பகுதியில் 5 ஆயிரத்து 185 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

இந்த நிலையில், தமிழகத்தில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 6 இலட்சத்து 46 ஆயிரத்து 128 ஆக உயர்வடைந்துள்ளது.

5 ஆயிரத்து 718 பேர் கடந்த 24 மணிநேரத்தில் மீண்ட் நிலையில், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 91 ஆயிரத்து 811 ஆக அதிகரித்துள்ளது.

44 ஆயிரத்து 437 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.