மன்னாரில் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

202008210903188952 Reduction of corona test isolated seats to 68 for 47600 SECVPF
202008210903188952 Reduction of corona test isolated seats to 68 for 47600 SECVPF

மன்னாரில் 5 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

மன்னார் ஆயர் இல்லத்தில் பணியாற்றிய கட்டடத் தொழிலாளி ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை நேற்றுமுன்தினம் கண்டறியப்பட்டது. அதனையடுத்து அவருடன் பணியாற்றிய ஏனையவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.

அவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கே கொரோனா தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது என்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

வடக்கு மாகாணத்தில் 210 பேருக்கு இன்று பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது. அவர்களில் 5 பேருக்கு மட்டுமே உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏனைய அனைவருக்கும் தொற்று இல்லை என்று அறிக்கை கிடைத்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.