மேலும் 103 பேர் அடையாளம்!

1586181556
1586181556

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 103 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதன்படி, மினுவங்கொடை பிரண்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலையின் பணியாளர்கள் இருவரும் அவர்களுடன் தொடர்பை பேணிய 101 நபர்களுமே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, இதுவரையில் மொத்தமாக பிரண்டிக்ஸ் தொழிற்சாலையுடன் தொடர்புடைய 1,186 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.