முன்னாள் காவல்துறைமா அதிபர் பூஜித் ஜயசுந்தர இன்று உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்வம் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த விதம் தொடர்பில் குறித்த ஆணைக்குழுவின் தலைவர் அவரை எச்சரித்துள்ளார்.
மேலும், இனிவரும் காலங்களில் இவ்வாறான பதில்களை வழங்க வேண்டாமெனவும் ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்று 10ஆவது நாளாகவும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் கட்டாய விடுமுறையில் உள்ள முன்னாள் காவல்துறைமா அதிபர் பூஜித் ஜயசுந்தர முன்னிலையாகியிருந்தார்.