கொரோனா அச்சுறுத்தல் காணப்பட்டு வரும் நிலையில் மத்தியஸ்தசபை செயற்பாடுகளை பிற்போட்டுள்ளதாக வவுனியா மத்தியஸ்தசபையின் தலைவர் சி. வரதராஜா தெரிவித்தார்.
வாரந்தோறும் ஞாயிற்று கிழமைகளில் வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் இடம்பெற்று வரும் மஸ்தியஸ்த சபையின் செயற்பாடுகளே இவ்வாறு பிற்போடப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை சமூகத்தில் இயல்புநிலை மீள் ஏற்பட்டதன் பின்னர் மத்தியஸ்த சபை மீள் ஆரம்பிப்பது தொடர்பிலும் அறிவிக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.