மட்டக்களப்பில்சட்ட விரோத மதுபான வியாபாத்தில் ஈடுபட்ட மதுவியாபாரி கைது !

மட்டக்களப்பு கருவப்பங்கேணி பிரதேசத்தில் நீண்ட காலமாக சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்ட மதுபான வியாபாரி ஒருவரை 113 கால் போத்தல் கொண்ட மதுபான போத்தல்களுடன் இன்று ஞாயிற்றுக்கிழமை (11) பிற்பகல் கைது செய்துள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்

பொலிஸ் மாவட்ட குற்றவியல் பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சம்பவதினமான இன்று ஞாயிற்றுக்கிழமை (11) பிற்பல் மாவட்ட குற்றவியல் பிரிவு பொறுப்பதிகாரி. டி.எஸ்.டி. பண்டார தலைமையில் சப் இன்பெ இன்பெஸ்ரர் சொர்ணபால, பொலிஸ் கான்டபிள்களான த. ராஜ்மோகன், சுதி மில்சன், பண்டார, சந்தன, பிரோமரத்தின ஆகியோர் கொண்ட பொலிஸ் குழுவினர் கருவப்பங்கேணி அம்பிறோஸ் வீதியிலுள்ள குறித்த வீட்டை சுற்றிவளைத்து சோதனையில் வீட்டின் கட்டிலின் கீழ் ஒழித்து வைக்கப்பட்டிருந்த மதுபான போத்தல்களை மீட்டதுடன் மது வியாபாரியையும் கைது செய்தனர்.

இதில் கைது செய்யப்பட்டவர் நீணடகாலமாக சட்டவிரோத மதுபான வியாபாரத்தில் ஈடுபட்டுவந்துள்ளதாகவும் தற்போது கொரோ தொற்று காரணமாக மதுபானசாலைகள் மூடப்படம் நிலையில் சட்டவிரோதமாக மதுபானத்தை விற்பதற்காக கௌ;வனவு செய்யப்பட்டு ஒழித்துவைத்துள்ளார் எனவும் பொதுமக்கள் இவ்வாறான சட்டவிரோத மதுபானம் மற்றும் போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வருபவர்கள் தொடர்பாக தெரிந்தால் உடனடியாக பொலிஸ் மாவட்ட குற்றவியல் பிரிவுக்கு தகவல்களை வழங்குமாறு அவர் தெரிவித்ததுடன்கைது தெய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

IMG 5274
IMG 5274
IMG 5269
IMG 5269