146ஆவது பன்னாட்டு அஞ்சல் தினத்தை முன்னிட்டு வவுனியாவில் குருதித்தானம் வழங்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.
வவுனியா பிரதான அஞ்சல் அலுவலகத்தில் இடம்பெற்ற இவ் இரத்ததான நிகழ்வில் நூறிற்கும் மேற்பட்ட அஞ்சல் திணைக்கள ஊழியர்கள் கலந்துகொண்டு குருதித்தானம் வழங்கி வைத்தனர்.
பிரதேச அஞ்சல் அத்தியட்சகர் மஞ்சுள ஜெயசுந்தர தலைமையில் இடம்பெற்ற இவ் நிகழ்வு காலை9 மணிக்கு ஆரம்பமாகி மாலை3 மணிவரையும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.