இந்திய இராணுவத்தால் கொக்குவிலில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 34ஆம் ஆண்டு நினைவஞ்சலி!

இந்திய இராணுவத்தினரால் கொக்குவில் பிரம்படி பகுதியில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 34ஆம் ஆண்டு நினைவஞ்சலி நினைவு தூபியில் நினைவு கூரப்பட்டது.

குறித்த நிகழ்வு இன்று காலை கொண்டாடப்பட்டது.

குறித்த நினைவு தூபிக்கு மலர்மாலை அணிவித்து ஈகை சுடர் ஏற்றப்பட்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த அஞ்சலி நிகழ்வில் நல்லூர் பிரதேச சபையின் உப தவிசாளர் ஜெயகரன்,பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.