மடு வலயக்கல்விப் பணிமனையில் இடம்பெற்ற டெங்கு ஒழிப்பு சிரமதானம்!

டெங்கு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு மடு வலயக்கல்விப் பணிமனையில் இன்றைய தினம் (13) காலை டெங்கு ஒழிப்பு சிரமதானப் பணிகள் இடம்பெற்றுள்ளது.

மடு வலயக்கல்விப் பணிப்பாளர் எஸ்.சத்தியபாலன் தலைமையில் மடு வலயக்கல்விப் பணிமனை வளாகப் பகுதியில் குறித்த சிரமதானம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது மடு வலயக்கல்வி பணிமனையில் கடமையாற்றுகின்ற பணியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு டெங்கு ஒழிப்பு சிரமதானப்பணிகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.