கல்பிட்டி மாதுளை உற்பத்தியாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்!

சரியான அறிவு மற்றும் தொழில்நுட்பத்தை அரசாங்கம் வழங்கினால், முழு நாட்டுக்கும் தேவையான மாதுளம் பழங்களை கல்பிட்டி பகுதியில் இருந்து பெறமுடியும் என்று கல்பிட்டி மாதுளை விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், பல ஆண்டுகளாக எந்தவொரு உதவியும் அரசாங்கத்தினால் தமக்கு கிடைக்காததன் காரணமாக தற்போது உதவியற்ற நிலையில் இருந்ததாக விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.