நாட்டின் தற்போதைய கொரோனா பரவல் நிலைமையைக் கருத்தில் கொண்டு, இன்று முதல் அனைத்து நடவடிக்கைகளையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்க ஓய்வூதியத் திணைக்களம் முடிவு செய்துள்ளது.
அதன்படி, ஓய்வூதியம் பெறுபவர்களை தெரிவு செய்வதற்கான நேர்முகங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. மறுஅறிவித்தல் வரை வளாகத்திற்கு வருவதைத் தவிர்க்குமாறு திணைக்களம் பொதுமக்களிடம் கோரியது. ஓய்வூதியம் பெறுவோர் 1970 அவசர தொலைபேசி இலக்கம் வழியாக மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.