தனிமைப்படுத்தல் மையமாக மாற்றப்பட்டுள்ள மற்றுமொரு கல்லூரி!

59e16f087d909894d5b7be8f6a5d000b
59e16f087d909894d5b7be8f6a5d000b

இலங்கையில் அதிகரித்து வரும் கொரோனா சந்தேக நபர்களை தங்க வைக்க ஏற்கனவே ஒதுக்கப்பட்ட இடங்கள் பற்றாக்குறையாக உள்ள நிலையில் நாட்டிலுள்ள கல்வியியற் கல்லூரிகள் தனிமைப்படுத்தல் நிலையங்களாக மாற்றப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் இன்றையதினமும் மற்றுமொரு தேசிய கல்வியியற் கல்லூரி தனிமைப்படுத்தல் மையமாக மாற்றப்பட்டுள்ளது.

இதன்படி வெயாங்கொடவில் அமைந்துள்ள தேசிய கல்வியியற் கல்லூரியே தனிமைப்படுத்தல் நிலையமாக மாற்றப்பட்டுள்ளது.

அங்கிருந்து மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் அவர்களின் வீடுகளுக்கு அனுப்ப ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ள படையினரால் விஞ்ஞானபீடம் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையத்தில் சுமார் 1300 பேர் தனிமைப்படுத்தப்படவுள்ளனர்.அத்துடன் வேறு இடங்களில் தனிமைப்படுத்தப்பட்ட 394 பேர் இங்கு அழைத்து வரப்படவுள்ளனர்.