பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டிகள் வழங்கி வைப்பு!

வவுனியா பாலமோட்டை, நவ்வி பகுதியில் வசித்து வரும் பாடசாலை செல்லும் வசதியற்ற இரு மாணவர்களுக்கு  புலம்பெயர் நாட்டின் நிதி உதவியில் சமூகப் பொருளாதார அபிவிருத்தி நிறுவனம் (Sedo) அமைப்பினால் துவிச்சக்கரவண்டி வழங்கி வைக்கப்பட்டுள்ளது .

இந் நிகழ்வு இன்று (14) வவுனியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.

இந் நிகழ்வில் மேலதிக மாவட்ட செயலாளர் செல்வி கு.சபர்ஜா, மாவட்ட சிறுவர் மேம்பாட்டு அலுவலகர் ஜெ.ஜெயகெனடி, சிடோ அமைப்பின் ஸ்தாகபர் து.சுதாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர் .