தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!

தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீரசிங்கம் ஆனந்தசங்கரி வெள்ளவத்தையிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

87 வயதான அவர், திடீர் சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் நேற்று (13) அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவசர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டுவருவதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆனந்தசங்கரி பல தசாப்த காலமாக தமிழ் அரசியல் பரப்பில் நிலைபெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.