நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்துவதற்கான எவ்வித திட்டமும் இல்லை என காவல்துறை ஊடகப் பேச்சாளர், பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
கம்பஹா மாவட்டத்தில் கட்டுநாயக்க காவல்துறை பிரிவு உள்ளடங்களாக 19 காவல்துறை பிரிவுகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலிலுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.