தமிழ் அரசியல் கைதிகளை விடுதலையை வலியுறுத்தி ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம், ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக இன்று சத்தியாகிரக போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளார்.
சிறைகளில் வாழும் தண்டனை பெற்ற அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு மற்றும் ஏனையவர்களை நிபந்தனையின்றி விடுவித்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தே ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம், ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.
இதன் தொடர்ச்சியாக அடுத்து பிரதமரின் அலரி மாளிகைக்கு முன்பாக இன்று பிற்பகல் தனது போராட்டத்தைத் தொடரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.